சாத்துார்: சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்தவர் கைது....

84பார்த்தது
சாத்துார் அருகே சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்தவர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துாரிலிருந்து சின்னகாமன் - பட்டியில் ரஞ்சித்குமார் இவர் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சம்பதன்று இவர் தனது வீட்டின் அருகே உள்ள காலி மனையில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் பேப்பர் வெடிகுண்டு ஆகியவற்றை தயார் செய்து இருப்பு வைத்து இருந்ததை விற்பனைக்கு எடுத்து செல்லும் போது சின்ன காமன்பட்டியில் சாத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் வாகன தணிக்கை செய்தனர். அர்போது சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து விற்பனை செய்யபடுவது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி