சாலைகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது சேதமடைந்த சாலைகள் புதுபிக்கப்பட்டதை நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்தனர். சாத்தூர் பகுதியில் உள்ள நள்ளி, பனையடிப்பட்டி, சிவசங்குபட்டி ஆகிய பகுதியில் உள்ள சாலைகள் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது சாலை பல இடங்கள் மழை நீரால் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்திருந்தது. ஆகவே மேற்கண்ட சாலைகள் வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தித்து வந்தனர். பழுதடைந்த சாலையை 2023-24 ஆம் ஆண்டுக்கான திட்டப்பணிகள் மற்றும் வெள்ள நிவாரணப்பணிகள் நிதியில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. அவற்றை தமிநாடு அரசு நெடுஞ்சாலை துறை திட்டப்பணிகள் மற்றும் வெள்ளநிவாரணப் பணிகள் கண்காணிப்பாளர் த. ஜெயராணி ஆய்வு செய்தார். உடன் விருதுநகர் மாவட்ட கோட்டப் பொறியாளர் மு. பாக்கியலட்சுமி, சாத்தூர் உதவி கோட்டப் பொறியாளர் அனந்தகுமார், உதவிப்பொறியாளர் பொன்முரளி ஆகியோர் இருந்தனர்.