சாத்தூர் - Sattur

மூன்றாவது புத்தகத் திருவிழா நிறைவு விழா கலந்து கொள் அழைப்பு

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே. வி. எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27. 09. 2024 முதல் 07. 10. 2024 வரை திட்டமிடப்பட்டு மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி, விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழாவிற்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகள் வர விரும்புவதாலும், கல்லூரி மாணவர்கள் பார்வையிடுவதற்காகவும் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று மேலும் மூன்று நாட்கள் 10. 10. 2024 வியாழக்கிழமை மாலை வரை புத்தகக்கண்காட்சி நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும், விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழாவானது நாளையுடன் நிறைவு பெற உள்ளதால், இப்புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீடியோஸ்


விருதுநகர்
Oct 09, 2024, 14:10 IST/விருதுநகர்
விருதுநகர்

விருதுநகர்: காபி வித் கலெக்டர்; மாணவர்களை ஊக்கப்படுத்திய ஆட்சியர்

Oct 09, 2024, 14:10 IST
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று (அக்.,9) 107-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.