சாத்தூர் - Sattur

சாத்தூர்: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் 3பேர் காயம்

சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் காயம். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கோணம்பட்டி விளக்கு அருகே, சவகாசியில் இருந்து சாத்தூர் நோக்கி அதி வேகமாக வந்த தனியார் பேருந்து, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற சிவகாசி நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்த பாப்பையா (50) மீது மோதி பேருந்து அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் பின்பக்க சுவர் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் இருவர் காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும். மேலும் படுகாயம் அடைந்த பாப்பையா உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிவேகமாக பேருந்த இயக்கி விபத்தை ஏற்படுத்திய சிவகாசி பூச்சக்காபட்டியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் தங்கம் என்பவரை பிடித்து சாத்தூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்