

விருதுநகர்: இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தவறி விழுந்ததில் பெண் காயம்
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராசாத்தி வயது 47. இவர் நடந்து செல்லும்போது, இவருக்குத் தெரிந்த பாண்டி என்பவர் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, ராசாத்தி அணிந்திருந்த சேலை இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ராசாத்தி காயமடைந்த நிலையில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.