சாத்துார்: சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவர் கைது...

83பார்த்தது
சாத்தூர் அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவர் கைது. பட்டாசுகள், மூலப்பொருட்கள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் வட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியம்
சின்னகாமன்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள
காலிமனையில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் மற்றும் பலதரப்பட்ட வெடிகள், கருந்திரிகள் இருப்பு இருப்பதாக சாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் போலீஸார் நேரில் சென்று சோதனை செய்தனர். மேலும் சோதனையில் கருந்திரிகள், சரவெடிகள், கிப்ட் பாக்ஸ்கள் மற்றும் மூலப் பொருட்கள்இருப்பு இருந்ததை கண்டறியப்பட்டன. மேலும் விசாரணை செய்ததில் சின்னகாமன்பட்டியை சேர்ந்த வாசுதேவன் என்பது தெரிய வந்தன. சம்பவ இடத்திலிருந்து அனைத்து பட்டாசுகளையும் பறிமுதல் செய்த போலீஸார் வாசுதேவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி