சாத்தூர்: லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது...

81பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்துார் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டீக்கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி மற்றும் பிற மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக சாத்துார் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீஸார் நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் சாத்துார் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி