சாத்தூர்: சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது...

83பார்த்தது
சாத்துார் அருகே கடையில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே உள்ள சடையம்பட்டியை சேர்ந்த அருணாசலம் என்பவர் அபிசரன் என்ற பெயரில் மேட்ட மலை பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். மேலும் பட்டாசு கடை அருகே உள்ள காலி மனையில் தகர செட் அமைத்து பட்டாசுகள் இருப்பு இருப்பதாக சாத்துார் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் போலீஸார் சோதனை ஆய்வு செய்தனர். மேற்படி ஆய்வில் திரி மற்றும் பேன்சி ரக வெடிகள் சட்டவிரோதமாக பதுக்கி இருப்பது தெரியவந்தன. மேலும் பதுக்கிய பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி