சாத்துார்: சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்தவர் கைது..

59பார்த்தது
சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்தவர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் வட்டம், வெம்பக்கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியான மண்குண்டம்பட்டி பச்சையாபுரம் பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்யபடுவதாக காவல் நிலையத்துக்கு தகவல் வந்ததன. மேலும் தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் குருநாதன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் தாயில்பட்டியை சேர்ந்த செந்தூர் பாண்டியன் என்பவர் சட்ட லிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்து இருப்பு வைத்திருந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செப்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி