சாத்துார்: சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்தவர் கைது

71பார்த்தது
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை காவல் சரகத்திற்குட்பட்ட எலுமிச்சங்காய்பட்டியில் ஈ. மேட்டூரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பேன்சி ரக வெடிகள் தயார் செய்வதாக ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன.

மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் ஹரி ராம் தலைமையில் சோதனை செய்தனர். சோதனையில் அவர் சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு இருந்ததை பறிமுதல் செய்த போலீஸார் ரமேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி