சாத்துார்: சட்டவிரோதமாக பேன்சி வெடி தயார் செய்த நபர் கைது...

58பார்த்தது
சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்த நபர் கைது. பேன்சி ரக பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் வட்டம்,
வெம்பம்கோட்டை காவல் சரகம், எலுமிச்சங்காய் பட்டியில் மூர்த்தி என்பவர் வீட்டின் பின்புறம் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு வைத்து இருப்பதாக ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். மேலும் சோதனையில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு இருந்ததை கண்டறியப்பட்டு, அதை பறிமுதல் செய்தனர். மேலும் மூர்த்தி மீது ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி