சாத்தூர்: சரவெடி தயார் செய்தவர் கைது. சரவெடிகள் பறிமுதல்...

74பார்த்தது
சர்த்துார் அருகே பட்டாசு ஆலையில் சரவெடி தயார் செய்தவர் கைது. சரவெடிகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே செவல்பட்டியில் அகத்தியன் என்ற பெயரில் அலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசுகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலைகளில் சட்டவிரோதமாக செயல்படுவதை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் தனி குழு அமைத்து சோதனை செய்து வருகின்றனர். அதன் பேரில் செவல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வெள்ளை பாண்டியன் தலைமையில் ரோந்து பணி செய்யும்போது செவல்பட்டியில் இயங்கி வரும் அகத்தியன் பட்டாசு ஆலையில் சோதனை செய்யும் போது உச்ச நீதிமன்றம் தடை செய்த சரவெடிகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். மேலும் தயார் செய்த சரவெடிகளை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைபாண்டியன், வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் அந்தோனி செல்வராஜ் மீது புகார் அளித்ததின் பேரில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி