சாத்துார்: தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்தவர் கைது...

72பார்த்தது
சாத்தூர் அருகே கல் குவாரி அருகே தகர செட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்தவர் கைது. பட்டாசு மற்றும் கருந்திரிகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன்பாறை கிராமத்தில் இயங்கி வரும் மகாலட்சுமி குவாரி அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக, உச்ச நீதிமன்றம் தடை செய்த சரவெடிகள் தயார் செய்வதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் குருநாதன் தலைமையில் போலீளார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் உச்ச நீதிமன்றம் தடை செய்த சரவெடிகள் தயார் செய்து விற்பனைக்கு இருந்ததை கண்டறியப்பட்டு அதை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், திருவேங்கடம், முக்கூட்டு மலையை சேர்ந்த கணசேன் என்பவரது மகன் அன்புராஜ் என்பவர் தெரிய வந்தன. மேலும் சரவெடிகளை பறிமுதல் செய்த போலீஸார் அன்பராஜ் மீது வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி