அருப்புக்கோட்டை - Aruppukkottai

சொத்து பிரச்சனை.. அண்ணனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

சொத்து பிரச்சனை காரணமாக 63 வயது முதியவரை தாக்கிய நான்கு பேர் மீது அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் அழகுமலை (வயது 63) இவருக்கும் இவருடைய தம்பி சிங்கம் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்ட சிங்கம் அவருடைய நண்பர்களான சுப்புராஜ், சிங்கம், பூமாலை, ராஜேஸ்வரி ஆகிய நான்கு நபர்களுடன் அழகு மலையை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்