காரை விட்டு இறங்காத மதுரை எம்எல்ஏ.. கொந்தளித்த பெண்கள்

70பார்த்தது
மதுரை செல்லுர் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், அவ்வழியாக சென்ற திமுக எம்.எல்.ஏ. கோ. தளபதியின் காரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். மேலும், தங்களது பகுதியை வந்து பார்க்குமாறு வலியுறுத்தினர். ஆனால், காரில் அமர்ந்தபடி கீழே இறங்காததால், “கார்ல இருந்து இறங்கி வந்து பாத்தா தான எங்க வலி என்னானு தெரியும். ஓட்டு கேட்பதற்காக மட்டும் வருகிறீர்கள், இப்போது வரமாட்டீர்களா?” என மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி