விருதுநகர்: எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எல். ஐ. சி அலுவலகம் முன்பு பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்தி வழங்க வேண்டும், எல் ஐ சி பாலிசிக்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க வேண்டும், எல். ஐ. சி முகவர்களுக்கான கமிஷனை குறைக்க கூடாது, எல். ஐ. சி முகவர்களுக்கான கமிஷனை‌ திரும்ப பெறும் சரத்தை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அருப்புக்கோட்டை எல். ஐ. சி முகவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‌

எல். ஐ. சி முகவர் சங்கத் தலைவர் பாரதியார் தலைமையில், செயலாளர் ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எல். ஐ. சி முகவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். ‌ இந்த ஆர்ப்பாட்டத்தில் எல். ஐ. சி முகவர்கள் சங்க பொருளாளர் குணசேகரன், இணை செயலாளர் காளீஸ்வரன் உள்ளிட்ட எல். ஐ. சி முகவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி