விக்கிரவாண்டி - Vikravandi

செங்கல் சூளை உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி

செங்கல் சூளை உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி

விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப், 42; செங்கல் சூளை உரிமையாளர். இவர், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் சுவாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். ஊர்வலத்தின்போது, ஜெனரேட்டரை இழுத்த போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடன், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே பிரதாப் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా