விழுப்புரம் அடுத்த காங்கேயனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் ஆகாஷ், (21); பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ளார். வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இது பற்றி அவரிடம் பாலமுருகன் கேட்டதால், மனமுடைந்த ஆகாஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தைக் குடித்து மயங்கினார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், காணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.