விக்கிரவாண்டி - Vikravandi

ஆசிரியர்களிடையே தகராறு போலீசார் விசாரணை

ஆசிரியர்களிடையே தகராறு போலீசார் விசாரணை

விக்கிரவாண்டி அருகே பணி மாறுதல் தொடர்பாக 2 பெண் ஆசிரியர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் முன்னிலையில் செருப்பால் தாக்கி கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்தனர். விக்கிரவாண்டி அடுத்த செ. புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரி, 53; செஞ்சி அடுத்த சிறுகடம்பூரைச் சேர்ந்தவர் பார்வதி, 54; இருவரும் எண்ணாயிரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியைகளாக பணிபுரிந்தனர். கடந்த 9 மாதங்களுக்கு முன் எண்ணாயிரம் பள்ளியில் போதிய அளவில் மாணவர் வருகை குறைவாக இருந்ததால் பாலசுந்தரியை அருகில் 200 மீட்டர் துாரத்தில் உள்ள திருநந்திபுரம் அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தனது பணி மாறுதலுக்கு பார்வதிதான் என பாலசுந்தரி நினைத்ததால் இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி திருநந்திபுரம் பள்ளியில் 2 ஆசிரியைக்குள் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு பாலசுந்தரி மாணவர்கள் முன்னிலையில் பார்வதியை செருப்பால் தாக்கியுள்ளார். இதனையறிந்த பார்வதியின் கணவர் தியாகராஜன் தட்டிக்கேட்டபோது அவரையும் பாலசுந்தரி செருப்பால் தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பார்வதி பாலசுந்தரியை திருப்பி செருப்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்து பெரியதச்சூர் போலீசில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా