விழுப்புரத்தில் கஞ்சா விற்ற மூவரை போலீார் கைது செய்தனர்.

76பார்த்தது
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கே. கே. ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் அண்ணா நகர் விக்னேஷ், 26; என்பவரை கைது செய்தனர். அவர் வைத்திருந்த 56 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோன்று, விழுப்புரம் ஜி. ஆர். பி. தெருவில் கஞ்சா விற்ற முத்தோப்பு அகரம்பேட்டையை சேர்ந்த நந்தகுமார், 19; பிரகாஷ், 26; ஆகியோரை மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ராபட் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 12 கிராம் கஞ்சா பொட்டலங்கள், மொபைல்போன், பைக் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய விழுப்புரத்தை சேர்ந்த முகமது ஆசாத் என்பவரை தேடிவருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி