
விழுப்புரம்: மோட்டார் சைக்கிள் கார் மீது மோதி முதியவர் பலி
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன் (வயது 40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதேகிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (72) என்பவரை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சின்னநெற்குணம் பஸ்நிறுத்தம் அருகே சென்னை-திருச்சி தேசியநெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக முன்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஏழுமலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.