மயிலம் - Mailam

குடிபோதையில் தகராறு நண்பர்கள் 3 பேர் கைது

குடிபோதையில் தகராறு நண்பர்கள் 3 பேர் கைது

வளவனுார் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். வளவனுார் அடுத்த குமளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் ஜெயப்பிரகாஷ், 30; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் மகன் ஆறுமுகம், 31; அமாவாசை மகன் மூர்த்தி, 33; நண்பர்கள். மூவரும் நேற்று முன்தினம் அதே கிராமத்தில் மது அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆறுமுகம், மூர்த்தி இருவரும் சேர்ந்து ஜெயப்பிரகாைஷ தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இரு தரப்பு புகாரின் பேரில், வளவனுார் போலீசார் ஆறுமுகம், மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా