பிடாகம் பகுதியை சேர்ந்த பெண் விஷம் குடித்து தற்கொலை

74பார்த்தது
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ் மனைவி ருக்மணி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமராஜ் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகின்றார். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ருக்மணியின் தம்பி ஆனந்தராஜ் (25) என்பவர் உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ருக்மணி, நேற்று முன்தினம் அதிகாலை விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ருக்மணி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி