திருப்பூர் - Tirupur

திருப்பூர்: வெடி விபத்து காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் மு. பெ. சாமிநாதன் ஆறுதல்

திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியில் கடந்த 8-ந் தேதி நடந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் பாண்டியன் நகர் பகுதியில் சம்பவம் நடந்த இடத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா, திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஷ், தெற்கு தாசில்தார் மயில்சாமி, எல். பி. எப். பனியன் சங்க பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా