சாலையில் திறக்கப்பட்ட கார் கதவில் மோதி பனியன் தொழிலாளி உயிரிழப்பு. சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 52 வயதான இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக பணியாற்றி வருகிறார் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பனியன் நிறுவனத்தில் பணி முடிந்து சொந்த ஊர் செல்வதற்காக அண்ணா நகர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார் அப்போது சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்தவர்கள் பின்னே வரும் வாகனத்தை கவனிக்காமல் கார் கதவை வேகமாக திறந்தனர். சரியாக அந்த நேரம் பாலகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற போது கார் கதவில் மோதி கழுத்தில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாலகிருஷ்ணனை மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நிற்கும் கார்கள் பின்னே வாகனம் வருகிறதா என பார்த்த பின்னரே கதவுகளை திறக்க வேண்டும் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்