விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் பீகார் இளைஞர்கள் இரண்டு பேர் கைது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ரயிலில் இருந்து இறங்கி வந்த வட மாநில இளைஞர் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றார் இதனைத் தொடர்ந்து அவரை விரட்டிப் பிடித்த போலீசார் அவரிடம் சோதனை இட்டபோது போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து அவர் கொண்டு வந்த போதை பொருளை சோதனைக்கு அனுப்பிய போது அது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெராயின் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் பீகாரைச் சேர்ந்த விகாஷ் குமார் 20 என்பது நியூ திருப்பூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் கடந்த ஓர் ஆண்டாக பணியாற்றி வந்ததும் தற்பொழுது ஊருக்குச் சென்று விட்டு திரும்பி வரும் பொழுது ஹெராயின் போதை பொருளை விற்பனைக்கு வாங்கி வந்ததும் தெரியவந்தது மேலும் இவருக்கு உதவியாக செயல்பட்ட பீகாரை சேர்ந்த அபிஷேக் 25 என்பவரையும் நியூ திருப்பூர் பகுதிக்கு சென்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.