திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் அண்ணாதுரை தலைமையில், கைகளில் கட்டு போட்டு வந்து நூதன முறையில் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: - திருப்பூர் மாவட்டம் முழுவதும் தரமற்ற தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளில் வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்தில் சிக்கிய வாகன ஓட்டிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்ட தார் சாலைகள் ஒரு ஆண்டுக்குள் சேதமடைந்து பல்லடம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதனால் தரமான சாலைகள் அமைத்து வேகத்தடை மீது வர்ணங்கள் பூசவும், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அறிவிப்பு பலகை வைத்து விபத்திலா மாவட்டமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.