திருப்பூர்: மூவேந்தர் முன்னேற்ற கழகம் கூண்டோடு வெளியேறினர்

50பார்த்தது
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் மேற்கு மண்டல செயலாளர் துரை ரமேஷ் தேவர் தனது ஆதரவாளர்களுடன் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திலிருந்து முழுமையாக விலகுவதாக தெரிவித்தார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தால் மேலும் பேசுகையில் கடந்த 22 ஆண்டு காலமாக இயக்கத்தில் பணியாற்றி 20க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் கட்சி நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதாகவும் கட்சி தலைமையில் இருந்து தங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை எனவும் எந்த ஒரு ஒத்துழைப்பும் வழங்கவில்லை எனவும் தனது ஆதரவாளர்களும் நேற்று மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில் இருந்து வெளியேறி விரைவில் மாற்று கட்சியில் அல்லது சமுதாய அமைப்பில் இணைவதாக தெரிவித்தார். 

அவருடன் சேர்ந்து அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகினார்கள். திருப்பூரில் இருந்த கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவர்கள் படங்கள், பெயர் பலகை அகற்றப்பட்டதால் மூவேந்தர் முன்னேற்ற கழகம் கூண்டோடு காலியானது.

தொடர்புடைய செய்தி