பல்லடம் - Palladam

காணாமல் போன பெண்ணை சிறப்பு படை அமைத்து தேடும் பணி தீவிரம்

காணாமல் போன பெண்ணை சிறப்பு படை அமைத்து தேடும் பணி தீவிரம்

திருப்பூர் மாவட்டம், வி. கல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் தங்கமணி வயது 32. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி இவரது வீட்டில் இருந்து காணாமல் போனதாக பெற்றோர்கள் காமநாய்க்கன் பாளையம் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் போலிசார் தேடி வந்த நிலையில் ஊதியூர் பகுதியில் சுற்றி திறிந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடையாளம் தெரியாத பெண் ஒன்று ஊருக்குள் சுற்றி திரிவதை கண்ட பொதுமக்கள் குழந்தை கடந்தும் பெண் என நினைத்து  ஊதியூர் போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது அப்பெண்ணிடம் விசாரித்தபோது அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே போலிசார் திருப்பூரிலுள்ள ஒரு காப்பகத்தில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்ற போது போலிசாரிடம் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காணாமல் போன அந்த பெண்ணை சிறப்பு குழு அமைத்து ஊதியூர் போலிசார் தேடி வருகின்றனர்.