துறையூர் - Thuraiyur

துறையூரில் திமுக இளைஞரணி கண்டன பொதுக்கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூரில் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன், முத்து ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். கழக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், தலைமை கழக பேச்சாளர் சாரர்மதி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாராபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகிய பாஜக அரசின் தமிழ்நாடு விரோத போக்கை கண்டித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా