துறையூரில்
ரூ. 3 கோடியே 53 லட்சம் செலவில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளருக்கு புதிய குடியிருப்பு.
திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழ்நாடு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் குடியிருப்பதற்கு என நீண்ட நாட்களாக குடியிருப்புகள் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 3 கோடியே 53 லட்சத்து 44 ஆயிரம் செலவில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்தது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக 16 குடியிருப்புகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இரண்டு குடியிருப்புகள் ஆக மொத்தம் 18 கட்டிடங்களை காணொளி காட்சிகள் மூலமாக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய வீடுகளை தீயணைப்பு நிலைய அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை, மத்திய மண்டல திருச்சி துணை இயக்குனர் குமார் மாவட்ட அலுவலர் வடிவேலு துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி துணைத் தலைவர் முரளி, மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் தர்மன் ராஜேந்திரன், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டார்கள்.