துறையூரில் செல்போன் திருடிய நபர்

51பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் கோமதி (44). இவர் ஊட்டச்சத்து மையம் (நியூட்ரிசன்) ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் கோமதி மாடிப்பகுதியில் செல்போனை வைத்துவிட்டு, அருகிலேயே துணி துவைத்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் செல்போனை திருடி கொண்டு சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து செல்போனை பார்த்த கோமதி, செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து வீட்டின் கீழ் பகுதிக்கு வந்த கோமதி தனது கணவரின் செல்போனிலிருந்து தன்னுடைய செல் எண்ணிற்கு போன் செய்துள்ளார். அப்பொழுது கோமதியின் வீட்டிற்கு அருகே உள்ள தனியார் நிறுவன அறையிலிருந்து ரிங்டோன் சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து கோமதி அங்கு சென்று பார்த்தபொழுது மர்ம நபர் ஒருவர் செல்போனிலிருந்து சிம் கார்டை கழட்டுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கோமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்போனை திருடிய மர்ம நபரை பிடித்து துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செல்போனை திருடிய நபர் பேரூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் (40) என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் ஜெகதீசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி