துறையூரில் ரூ.1.13 கோடிக்கு பருத்தி ஏலம்

85பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ரூபாய் 1,13,24,052 க்கு ஏலம் விடப்பட்டது. துறையூர் வேளாண்மை விற்பனை கூடத்தில் விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தி. தங்கதுரை, உரிம இட ஆய்வாளர் அ. அன்புசெல்வி, மேற்பார்வையாளர் சீ. தீபிகா மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. 

இந்த ஏலத்தில் 1653.32 குவிண்டால் பருத்தி ரூபாய் 1,13,24,052 க்கு ஏலம் விடப்பட்டது. அதிகபட்சம் ஒரு குவிண்டால் ரூபாய் 7,799 க்கும், மாதிரி விலை ரூபாய் 6,849 க்கும், குறைந்தபட்ச விலை ரூபாய் 6,000 க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் பெரம்பலூர், கொங்கனாபுரம், பண்ருட்டி, மகுடன்சாவடி, கும்பகோணம், செம்பனார்கோயில், நாமக்கல், பெரகம்பி, விழுப்புரம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் 400 க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி