கோவில்பட்டி - Kovilpatti

தூத்துக்குடி: ஆட்டோ மோதி வியாபாரி உயிரிழப்பு

தூத்துக்குடி: ஆட்டோ மோதி வியாபாரி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அத்தை கொண்டான் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த குருசாமி மகன் கனகராஜ் (56). காய்கறி வியாபாரி. இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் ஊரில் இருந்து நேற்று முன்தினம்(செப்.28) தெற்கு திட்டங்குளத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள சர்ச் அருகே சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் கனகராஜ் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த புதுக்கிராமம் வசந்தா நகர் 2-வது தெருவை சேர்ந்த ராதா (30) என்பவரும் பலத்த காயம் அடைந்தனர்.   ஆட்டோ டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயங்களுடன் கிடந்த 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் கனகராஜ் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా