

சிவகங்கை: பிரம்மோத்சவ திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள் திருக்கோவிலில் 142வது பிரம்மோத்சவ திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடி பதாதைக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் ஆகிய அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஏப்ரல் 20ஆம் தேதி கருட வாகனமும், ஏப்ரல் 22ஆம் தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 26ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு மேள் தேரோட்டமும், ஏப்ரல் 27ஆம் தேதி புஷ்ப பல்லக்கும் மற்றும் தினந்தோறும் மாலையில் சிறப்பு அலங்காரங்கள் பூஜைகளும் நடைபெற உள்ளன.