தொடர்மழையால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி

67பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நிவாரணத் தொகையை வழங்கினார். இதில் பேரிடர் மேலாண்மை துறையினரின் அறிக்கையின்படி,
கல்லல் மற்றும் பலவான்குடியில்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரு பெண்கள் உட்பட மூன்று பேர் குடும்பத்தினர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காரைக்குடி ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நின்ற நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் என்பவரது குடும்பத்தினருக்கு நான்கு லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்கினார்.
மேலும், வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்த ராஜேஸ்வரி என்பவருக்கு இழப்பீடாக 13, 000 ரூபாய் வழங்கிய பின்பு, மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மழை நீரைஉடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி