காரைக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் திடீர் பணி நீக்கம்

85பார்த்தது
கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பணியாற்றி வந்த முன்னாள் ராணுவத்தினர் 84பேர்எவ்விதமுன்னறிவிப்பின்றிசெவ்வாய்க்கிழமை திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக முன்னாள் ராணுவவீரரும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருமான தேவகோட்டை அருகே ஆந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த போ. சோலை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
முன்னாள் படை வீரரான நான் கடந்த வருடம் 16-10-2023 அன்று அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலம், தேவகோட்டைக் கிளையில் பாதுகாவலராகப் பணியமர்த்தப்பட்டேன். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை எந்த வித முன்அறிவிப்பும் இன்றி நேற்று வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறினார். என்னைப்போல கும்பகோணம் கோட்டத்தில் பணியாற்றிய முன்னாள் படை வீரர்கள் 84 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளோம். காரணம் தெரியவில்லை. இதனால் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்களும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளன. எனவே முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி