
தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் இராம்நகர் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருள்பணி ஆரோக்கியசாமி, அருள்பணி தாமஸ் மற்றும் திருத்தொண்டர் சேவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த பவனி இராம்நகர் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் தொடங்கி இராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் முடிவடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இதில் இறைமக்கள் மற்றும் கிளை கிராம இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவையினர் செய்திருந்தனர்