திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை: கோயில் அருகே கோழிக்கழிவு கொட்டப் படுவதால் பக்தர்கள் அவதி

சிவகங்கை: கோயில் அருகே கோழிக்கழிவு கொட்டப் படுவதால் பக்தர்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் அருகே கோழிக்கழிவு கொட்டப் படுவதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். இக்கோயிலையொட்டி கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் செல்கிறது. இக்கால்வாயில் சிலர் கோழி கழிவுகளை அடிக்கடி கொட்டுகின்றனர். கழிவு கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கோயில் வளாகத்தில் கோழிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கோயில் நிர்வாகமும் பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து இனி வரும் காலங்களில் கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்.

வீடியோஸ்


சிவகங்கை