புதுகாட்டாம்பூரில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு

77பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதுகாட்டாம்பூரில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஒன்றிய நகர திமுக சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 காளைகள் பங்கு பெற்றன. ஒவ்வொரு காளைகளை அடக்குவதற்காக ஒன்பது வீரர்கள் கொண்ட குழு களமிறங்கியது இதில் சில மாடுகள் பிடிபட்டன பல மாடுகள் காளையர்களை பந்தாடியபடி வெற்றிக் கொண்டது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகள் முட்டியது வீரர்கள் மூவருக்கு காயம் ஏற்பட்டது. திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி