ஶ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில்நவராத்திர திருவிழா

63பார்த்தது
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு சரஸ்வதி தேவி அலங்காரம் நடைபெற்றது முன்னதாக மூலவர் குழந்தை வேலாயுத பெருமாளுக்கும் விபூதி காப்பு அலங்காரம் நடந்தன தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொழுமண்டபத்தில் ஒன்பதாம் திருநாளில் அம்பிகை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து பக்தி பாடல்கள் பாடி உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன கோடி தீபம் கும்ப தீபம் நாகதீபம் காண்பித்து நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி தேவியை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி