திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை: அதிகபட்சமாக 256 மீட்டர் மழை பதிவு

கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை , சிவகங்கை, திருப்புவனம், மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு பின் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. சிவகங்கை பகுதியில் 57மீட்டர் மழைப்பதிவும் மானாமதுரை பகுதியில் 21 மில்லி மீட்டரும் இளையான்குடி பகுதியில் 18மில்லி மீட்டர் மழைப்பதிவும் திருப்புவனம் பகுதியில் 9. 20 மில்லி மீட்டரும்திருப்பத்தூரில் 27. 00 மில்லி மீட்டரும்காரைக்குடியில் 19. மில்லி மீட்டர் மழைப்பதிவு தேவகோட்டை பகுதியில் 19. 60மில்லிமீட்டர் மழைப்பதிவும் காளையார் கோவில் பகுதியில் 58 மில்லி  மீட்டர் மழைப் பதிவும் சிங்கம்புணரி பகுதியில் 27. 20 மில்லி மீட்டரும்சராசரியாக மாவட்டம் முழுவதும் 28. 44 மில்லி மீட்டர் மழை பதிவும் அதிகபட்சமாக 256 மில்லிமீட்டர் மழை பதிவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சிவகங்கை
Oct 17, 2024, 05:10 IST/மானமதுரை
மானமதுரை

திருப்புவனம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை

Oct 17, 2024, 05:10 IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொட்டப்பாளையம், நெல் முடிக்கரை, திருப்பாச்சேத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (அக். 17) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திருப்புவனம், புதூா், செல்லப்பனேந்தல், பழையூா், அல்லிநகரம், லாடனேந்தல், கீழராங்கியம், மேலராங்கியம், கலியாந்தூா், வயல்சேரி, மேலவெள்ளூா், மாங்குடி, அம்பலத்தடி, மணலூா், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், அதிகரை, வடகரை, பூவந்தி, பொட்டப்பாளையம், புலியூா், கொந்தகை, கீழடி, சொட்ட தட்டி, சயனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, மாரநாடு, பழையனூா், மேலச்சொரிக் குளம், வெள்ளிக்குறிச்சி, ஆவரங்காடு, முதுவ வந்திடல், மேலச்சொரிக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்றாா்.