சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு9 ஆண்டு சிறை

84பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கள்ளர் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் 30. இவர் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளியிக்கு வந்த 9 வயது சிறுமியை கடந்த 2019 ஜூலை 9 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கை நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார். குற்றவாளி குமாருக்கு 9 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 3500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கஇன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி