![](https://media.getlokalapp.com/cache/9a/ee/9aeecdd0e1bf96640cfe0d2b7ecb526b.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
வீட்டில் 10 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம். வி. எஸ் நகரில் மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்த பகுதியில் 10 வருடமாக கொத்தனார் வேலை செய்து வருவதாக தெரிகிறது. இவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் தொட்டி ஒன்றை வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். இது குறித்து சிங்கம்புணரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீஸார் முருகன் வீட்டில் வளர்த்திருந்த 10 அடி உயரமுள்ள கஞ்சா செடியை கைப்பற்றி முருகனை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி வளர்த்த தகவல் தெரிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.