திருப்பத்தூர் - Tiruppattur

தைப்பூசத் திருநாளை முன்னிட்டுபால்குடம்சுமந்து நேர்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே பிரண்டைக்குளம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஊர் எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பால்குடத்தை தலையில் சுமந்து வந்து கோயிலை வந்தடைந்து நேற்றிக்கடன் செலுத்தினர். பின்னர் மூலவர் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் சுவாமிக்கு சந்தனம், பலரசம், திருநீர், தயிர், இளநீர் அபிஷேகங்கள் நடைபெற்ற பக்தர்கள் சுமந்து வந்த பாலைக் கொண்டு பால் அபிஷேகம் பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு இடையே வெகு விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சங்காபிஷேகம், புனித கலச நீர் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று மூலவர் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபம், கும்ப தீபம், உள்ளிட்ட பல்வேறு தீபாரணைகள் காட்டப்பட்டது. இந்த தைப்பூச பால்குடம் விழாவினை பிரண்டைக்குளம், பனங்காடி, அல்லூர், நாட்டாரசன்கோட்டை, கொல்லங்குடி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வீடியோஸ்


சிவகங்கை
Feb 11, 2025, 15:02 IST/திருப்பத்தூர்
திருப்பத்தூர்

பால் காவடி பரவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன்.

Feb 11, 2025, 15:02 IST
சிவகங்கை மாவட்டம் கட்டானிபட்டி கிராமத்தை அடுத்துள்ளது பெரியகோட்டைபட்டி கிராமம். இங்கு மலை மீது அமைந்துள்ளது அருள்மிகு மலைக்கந்தன் கோவில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு மார்கழி மாதம் முதல் தேதியே இந்த கட்டானிபட்டி கிராமத்தை சுற்றியுள்ள பெரியகோட்டைப்பட்டி, பொன்குண்டுபட்டி, நடுவுப்பட்டி, கீழப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் காப்புக்கட்டி தங்களது விரதத்தை துவங்குவதுடன் தைப்பூசத்தன்று காவடி, பால் காவடி, பரவை காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை சுமந்து சுமார் 2 கி. மீ தூரம் நடந்து அருள்மிகு மலைக்கந்தன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்துவதுடன் மலைக்கந்த சாமிக்கு பாலபிஷேகம், சந்தன அபிஷேகம், திருநீரபிஷேகம் பண்ணீர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களை செய்து அலங்கரிக்கப்பட்டு பின்னர் பொது மக்களுக்கு காட்சி தரும் நிலையில் அதனை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்து செல்வர். இந்த ஆண்டு 43 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பால்காவடி, பன்னீர் காவடி உள்ளிட்டவைகளை சுமந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.