கோயம்பேட்டில் பொதுமக்களை கடிக்கும் நாய்கள்

79பார்த்தது
கோயம்பேட்டில் பொதுமக்களை கடிக்கும் நாய்கள்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. பயணிகளை விரட்டி, விரட்டி தெருநாய்கள் கடிப்பதால் பீதி அடைந்துள்ளனர். சிறுவர்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you