சிங்கம்புணரி பகுதியில் இடியுடன் கூடிய மழை.

73பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிங்கம்புணரி அதன் சுற்றியுள்ள காளப்பூர், எஸ் வி மங்கலம் , பிரான்மலை , வேங்கைபட்டி , உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த கனமழையால் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனம் தெரியாததால் முகப்பு விளக்குகளை ஔிரவிட்டு மெதுவாக செல்கின்றனர். இந்த கனமழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி