தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

61பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி யில் முத்துராமலிங்க தேவர் 62 வது குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திண்டுக்கல், , காரைக்குடி நெடுஞ்
சாலையில் பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 28 ஜோடிகள் என சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 38 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், ரொக்கத் தொகை என, பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கபட்டது,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி