சிவகங்கை: கடன் உதவிக்கான ஆணைகளை வழங்கிய அமைச்சர்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், ஏரியூர் கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு வகையான கடனுதவிக்கான ஆணைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ். , அவர்கள், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் ஆ. ரா. சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இராஜேந்திர பிரசாத் உட்பட பலர் உள்ளனர்.