சிவகங்கை: மாவட்டம் முழுவதும் அதிகபட்சமாக 252. 20 மில்லி மீட்டர் மழைபதிவு

68பார்த்தது
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை , சிவகங்கை, திருப்புவனம், மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு பின் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.

சிவகங்கை பகுதியில் 51 மில்லி மீட்டர் மழைப்பதிவும் , இளையான்குடி பகுதியில் 15 மில்லி மீட்டர் மழை பதிவும், திருப்பத்தூர் பகுதியில் 24. 80 மில்லி மீட்டர் மழை பதிவும் காரைக்குடி 143. 00 மில்லி மீட்டர் மழைப்பதிவு தேவகோட்டை பகுதியில் 11. 40 மில்லிமீட்டர் மழைப்பதிவும் சிங்கம்புணரி பகுதியில் 7. 00 மில்லி மீட்டர் மழைப் பதிவும் சராசரியாக மாவட்டம் முழுவதும் 28. 02மில்லி மீட்டர் மழை பதிவும் அதிகபட்சமாக 252. 20 மில்லிமீட்டர் மழை பதிவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் இன்று இரவு சுமார் 9 மணி அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி