ரோட்டை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி
கந்தர்வகோட்டை |

ரோட்டை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி

கீரனூர் உச்சாணி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (74). நேற்று முன்தினம்(செப்.8) மேய்ச்சலுக்கு மாட்டை கட்டிய அவர் ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

வீடியோஸ்


தமிழ் நாடு