கோர விபத்து: 2 கார்கள் மோதியதில் 5 பேர் பலி

72பார்த்தது
கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் 2 கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பெங்களூரு ஜே.பி. நகரில் வசிக்கும் யோகேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட இந்த விபத்தில் 3 ஆண்கள், 2 பெண்கள் என 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி