ஆக்ஸிஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று (செப்.9) திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10:30 மணி அளவில் உடல் கொண்டுவரப்பட்டு மாலை 4:30 மணியளவில் இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.