ஆதி திராவிடர் மாணவர் விடுதி: EPS-க்கு தமிழக அரசு பதில்

76பார்த்தது
ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என்றும், விடுதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், 2021-22ம் ஆண்டில் ரூ.35 கோடி மதிப்பில் 366 விடுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதாக தமிழக அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பராமரிப்பு பணிகளுக்காக நடப்பாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி